ஏடிஎம்மில் பணத்தை எடுத்தவரிடம் “பணம் என்னுடையது லேட்டாக வந்ததாக” கூறி, நூதன முறையில் புதிய வழியில் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஈரானிய கொள்ளையர்கள் தொடர்ந்து, அடுத்தடுத்து குற்றங்களை அரங்கேற்றும் தின்பஹாரியா திருட்டு வட மாநில கும்பலால் ஒன்று, சென்னையில் நுழைந்தது முதல் பல்வேறு விதமான நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, சென்னை வியாசர்பாடி அண்ணா நகர் 5 வது தெருவை சேர்ந்த நாராயணன், இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் பரமேஸ்வரி. இவர், நேற்று முன் தினம் இவர் நாராயணனை சந்தித்து தனக்கு ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்து தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி, நாராயணன் வியாசர்பாடி எம்பிஎம் தெருவில் செயல்பட்டு வரும் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்று உள்ளார்.
அப்போது, அங்கு பரமேஸ்வரியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 10 ஆயிரம் ரூபாய் எடுத்தவுடன் திடீரென ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த ஒருவர், “இது என்னுடைய பணம் என்றும், நான் கார்டு பயன்படுத்திய பிறகு பணம் லேட்டாக வெளியே வந்து உள்ளது” என்று கூறியும், அந்த பணத்தை பறித்து விட்டு சென்று உள்ளார்.
இதனால், ஒன்னும் புரியாமல் தவித்த நாராயணன், மீண்டும் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 10 ஆயிரம் எடுத்து பரமேஸ்வரியிடம் கொடுத்து உள்ளார். அப்போது, அவருக்கு 2 முறை மெசேஜ் வந்து உள்ளதாகவும், அதன்படி, 20 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கேட்டு உள்ளார்.
அப்போது தான், தான் ஏமாற்றப்பட்டதும், நூதன முறையில் ஒரு கும்பல் பணத்தை திருடி விட்டதும் தெரிய வந்தது. உடனடியாக, இது குறித்து நாராயணன் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.