Mon. Jun 30th, 2025

“தூத்துக்குடி லாக்கப் டெத்” போலீசே போலீசை கை விட்ட கதையா இது? என்ன நடந்தது..?

கடந்த 17.09.1999 ஆம் ஆண்டு நடந்த தூத்துக்குடி லாக்கப் டெத் சம்பவத்திற்கு 2025 மார்ச் மாதம் ஆயுள் தண்டனை தீர்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. யாருக்குத் தெரியுமா? விரிவாக பார்க்கலாம்..

இந்த தீர்ப்பே தற்போது போலீசார் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. பல போலீசாருக்கும் மிகவும் மன வருத்தம் உடைய தீர்ப்பாகவும் மாறி இருப்பதாக பிரபல வழக்கறிஞர்களே கருத்து தெரிவிக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து, வழக்கறிஞர் Dr. மு. சாதிக்கின் கருத்துக்களை தற்போது பார்க்கலாம்.

 

* கடந்த 17.09.1999 ஆம் ஆண்டு நடந்த தூத்துக்குடி லாக்கப் டெத் சம்பவத்திற்கு, கிட்டதட்ட 26 வருடங்கள் கழித்து 2025 ஆண்டு இப்போது தீர்ப்பு அளிக்கப்பட்டது பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும் நிலையில், எனது பார்வையில்.. இந்த வழக்கின் விசாரணையின் போது மூச்சடைப்பு வந்து இறந்து போன நபருக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் எந்த வித பகையோ, முன் விரோதமோ, உறவினர்களோ இல்லாத போது கடமையை செய்யும் போது ஏற்பட்ட ஒரு சம்பவம். அனைவரும் ஒருநாள் மரணம் உண்டு. விசாரணையின் போது எந்த வித முன்விரோதம் இல்லை என்பதால் இதனை கொலையாக எடுத்துக் கொள்ள இயலாது, எடுத்துக் கொள்ளவும் கூடாது*

* இப்படி தீர்ப்புகள் கொடுத்தால் இனி சட்டம் ஒழுங்கு + குற்றப்பிரிவு போன்ற இடங்களில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் எவ்வாறு சிறப்பாக நேர்மையாக உண்மையாக செயல்பட இயலும்.

* உதாரணமாக ஒரு திருடனை பிடிக்குறாங்கன்னு வைப்போம். ஐயா, ராசா நலமா? குடும்பத்தில் நலமா? என்ன சாப்பிடுறீங்க? ஐயா தான் சம்பந்தப்பட்ட கடையில் திருடுனீங்களா? என்று அன்பாக கேட்டால் அங்கே நியாயம் உண்மை வருமா? கண்டிப்பாக வராது.

* சினிமா படத்தில் விஜயகாந்த் என் விசாரணயே ஒரு தனி மாதிரி இருக்கும் சொல்லி குற்றவாளிகளை அடித்தால் கை தட்டுறீங்க? அதுவே நேரடியாக ஒரு உதவி ஆய்வாளர் பண்ணும் போது ஒன்று சேர்த்து தவறு என்று சொல்லுறீங்க?.

* சம்பந்தப்பட்ட RDO விசாரணை வைத்து தீர்ப்பு என்றால் அந்த RDO இதுவரை எந்த குற்றமும் பண்ணாத அவ்வளவு நல்லவரா?.

* அந்த RDO வுக்கு காவல்துறை அதிகாரிகள் பிடிக்காமல் கூட இருந்து பொய் சாட்சிகளை வைத்து அவர்கள் செல்லும் Statement வைத்து கூட விசாரணை அறிக்கை சமர்பித்து கூட இருக்கலாமே?

* பல இடங்களில் பலருக்கு காவல்துறை கூட மோதல் ஏற்படும் போது அந்த மோதலை இதுப்போன்ற பிரச்சனைகளில் தீர்த்துக் கொள்ளும் படி உள்ளதாக தான் உள்ளது.

– காவல் துறையும், நீதித்த்துறையும் இரண்டு கண்களாக ஒற்றுமையாக செயல்பட வேண்டிய போது அதிகாரிகளை சிறைக்கு அனுப்பி மீண்டும் மீண்டும் காவல்துறை & நீதித்துறை பிரிவினை தானே உருவாகிறது.

* ஒருவர் மருத்துவமனைக்கு போகிறார் சிகிச்சை பலனின்றி இறக்கிறார் டாக்டர்களை காப்பாற்ற தனிச்சட்டம் & அமைப்பு உள்ளது. மருத்துவர் மருந்து கொடுத்து அதை உண்ணும் போது நோயாளி இறந்தாலும் அது நோயாளியின் ஆயுசு முடிவு இறப்பு என்று மட்டுமே வரும் அங்கே கொலை என்ற ஒன்றே வராது.

* காவல் துறை அதிகாரிகளில் 5% மட்டுமே தவறானவர்கள். 95% நல்லவர்களே உள்ளனர். என்னை பொறுத்தவரை DSP திரு. ராமகிருஷ்ணன் மிகவும் நல்லவர், திறமையானவர், உதவி ஆய்வாளராக பணிபுரியும் போது மிகவும் நேர்மையானவர், உலக்கை இராமகிருஷ்ணன் என்ற அடைமொழி அவருக்கு உண்டு, உலக்கை என்ன செய்யும் நெல் மணிகளை குத்தி எடுத்து நல்ல அரிசி + தவிடு தனியாக பிரித்து கொடுக்கும். அதுபோல சமுதாயத்தில் குற்றம் செய்பவர்களை திருத்தி நல்வழிப்படுத்தியவர் DSP இராமகிருஷ்ணன். அவருக்கு இப்படி நிலைமை இதுவும் தவறானது.

* உதாரணமாக எனக்கும் ஒரு ஆய்வாளருக்கும் தனிப்பட்ட குடும்ப பகை. என் மீது பொய் வழக்கு போட்டு அடித்து கொலை செய்தால் அது கொலை என்று கூறலாம். அதை விடுத்து விசாரணையில் கொலை என்பது எந்த விதங்களில் நியாயம்?

* நேர்மைக்கு எப்போதும் கிடைக்கும் பரிசு 🎁 அவதூறு மட்டுமே. நெல்லை அம்பையில் ஒரு வீட்டில் கொள்ளை அடித்த குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் பிடித்து 2023 ஆம் ஆண்டு அவார்டு வாங்கியவர் DSP இராமகிருஷ்ணன். மிகவும் எளிமையானவர். நல்ல மனிதரும் கூட. பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.

* காவல் துறை அதிகாரிகளுக்கு தண்டனை கொடுத்தது போல நாட்டில் நடக்கும் அத்தனை குற்றத்திற்கும் தண்டனை உடனடியாக கொடுத்து இருந்தால் இந்த நாட்டில் குற்றவாளிகளே இருக்கமாட்டாங்க. 20 கொலை பண்ணியவன் கூட வெளியே சுதந்திரமாக திரிகிறான். அரசு பணியை தன் கடமையை செய்த காவல்துறை அதிகாரிகள் கம்பி எண்ணுகிறார்கள். எனக்கு இது மன வருத்தமே.

* சிங்கம் சூர்யா, வால்டர் வெற்றிவேல், ஹானஸ்ட்ராஜ் விஜயகாந்த், சாமி விக்ரம், காக்கிச்சட்டை கமல் இப்படி காவல்துறை அதிகாரிகள் தேவைன்னு பொதுமக்கள் சினிமா பார்த்து விட்டு வந்து இப்படி அதிகாரி கிடைக்க மாட்டாரா? என்று நினைப்பாங்க. உண்மையில் அப்படி காவல்துறை அதிகாரிகள் இருக்காங்க. அவர்களுக்கு நாம் கொடுக்கும் பரிசு இந்த சிறை தான்.

* காவல் துறை அதிகாரிகளுடன் அன்பாக பழகி பார்த்தவர்களுக்கு மட்டுமே அவர்களின் உண்மையான பாசம், நேர்மை புரியும். DSP இராமகிருஷ்ணன் மிகவும் நேர்மையான நல்ல மனிதர். தனிப்படையில் இவருக்கு பொறுப்பு கொடுத்தால் அதை சிறப்பாக செயல்படுத்துவார்.

* கொரனோ காலத்தில் ஒரு தொடர் குற்றவாளியை பிடிக்க 2 டீம் அதாவது என்று 2 DSP தலைமையில் டீம் தனித்தனியாக தேடும் போது ஒரு தனிப்படைக்கு DSP இராமகிருஷ்ணன் உள்ளார். அப்படி உள்ள போது போட்டு போட்டு யார் பிடிக்குறாங்க என்று அந்த குற்றவாளிக்கு அன்றைய அமைச்சர் சப்போர்ட் இருந்தும் துணிந்து கைது பண்ணினார் மற்றொரு நேர்மையான DSP. அப்போது பிடிக்கும் போது சொன்னார் நாம பிடிச்சுட்டோம் DSP இராமகிருஷ்ணன் என் நண்பன் கண்டிப்பாக வருவான் பிடிக்க அவன் திறமை அப்படின்னு சொல்லி வாய் மூடவில்லை DSP இராமகிருஷ்ணன் அங்கு வந்து விட்டார். மாப்பிளை நீ பிடிச்சுட்ட நல்வாழ்த்துகள் சொல்லி விட்டு போனார். அவரின் பணித்திறனுக்கு அதெல்லாம் சான்று. அமைச்சர் ஆதரவு இருந்தாலும் விடவில்லை அதற்காக சொன்னேன்.

* ஒரு நல்ல காவல்துறை அதிகாரியை சிறைக்கு அனுப்பி வைத்து பலரும் பெருமை அடையலாம் எனக்கு இதில் துளி அளவும் பெருமை இல்லை மாறாக மனது முழுவதும் வருத்தமே உள்ளது.

* காவல் பணியில் சிங்கம் சூர்யாவை விட மிகத்திறமையான அதிகாரியை சிறைக்கு அனுப்பிய தீர்ப்பாக தான் நான் இதனை பார்க்கிறேன்.

* காவல் துறை அதிகாரிகளும் மனிதர்களே? அவர்களுக்கும் குடும்பம் மனைவி பிள்ளைகள் உள்ளனர். அவர்களின் எதிர்கால நலன் இதுபோன்ற தீர்ப்புகளால் பாதிக்கப்படுவது போல உள்ளது.

* நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கைவிடுவதில்லை.

* ஒரு அரசாங்கம் சிறப்பாக செயல்பட உழைக்கும் ஒரே வர்க்கம் உதவி ஆய்வாளரும், ஆய்வாளரும் & DSP இவர்கள் மட்டுமே. சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால் ஆட்சியை குறை சொல்லுவாங்க. சட்டம் ஒழுங்கை கண்காணிக்கும் மிக உன்னதமான பணியை செய்யும் அடிமட்ட காவலருக்கும், உதவி ஆய்வாளருக்கும் சங்கம் இல்லாத காரணமே இவர்களின் மனக்குமுறல்கள் மன கஷ்டம் யாருக்குமே தெரிவதில்லை. IPS அதிகாரிகளுக்கு சங்கம் உள்ளது அவர்களது குறைகளை கேட்க. அடிமட்ட காவலருக்கும், உதவி ஆய்வாளருக்கும் எந்த நாதியும் இல்லை. அவர்களை தீர்ப்பு என்ற பெயரில் சிறைக்கு அனுப்புவது நல்லது இல்லை என்பதே எனது கருத்து.

* நேரடி உதவி ஆய்வாளர்(Taluk) இருந்து ADSP ஆகி அவர்கள் SP ஆகும் போது இந்த அரசு அவர்களை மதிக்காமல் IPS படிச்சுட்டு வந்தவர்கள் கிட்ட அதிகாரத்தை கொடுத்து விடுகிறார்கள். காவல் நிலையத்தில் ஏதேனும் எதிர்பாராத தவறு நிகழும் போது அடிமட்ட காவலரும் உதவி ஆய்வாளரும் ஆய்வாளரும் பாதிக்கப்பட்டு சிறைக்கு போறாங்க. அந்த நிலை மாற வேண்டும்.

* உழைப்பவர்களுக்கு தான் பதவி உயர்வு கொடுக்கனும். அடிமட்டம் இருந்து 25 வருடங்களுக்கு மேல் வேலை பார்த்தவர்களுக்கு மாவட்ட SP பதவி கொடுக்கும் போது கீழ்மட்ட காவலர், உதவி ஆய்வாளர்களை எப்படி வேலை வாங்க வேண்டும் என்பது அடிமட்டத்தில் இருந்து வந்த அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும். தமிழக அரசும் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

* இப்படி தீர்ப்பு வரும் போது காவல்துறையில் உள்ள 95% நேர்மையான அதிகாரிகள் தங்களது பணிகளை நேர்மையாக செய்ய பயப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது நாட்டில் சட்ட ஒழுங்கு பாதிக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாக ரோட்டில் நடமாடுவார்கள். ஆகவே நீதித்துறை அதனை கருத்தில் கொண்டு சில நேரங்களில் தீர்ப்பு கொடுக்கனும். நம் சமுதாயத்திற்கும் பொது மக்களுக்கும் எது செய்தால் நன்மை கிடைக்குமோ அதன் படி தீர்ப்பு கொடுப்பதில் தவறில்லை. இந்த வழக்கில் அதிகாரிகள் கடமையை செய்யும் போது ஏற்பட்ட ஒரு மரணம் அவ்வளவு தான்.

* நேரடி உதவி ஆய்வாளர் (தாலுகா) இருந்து ADSP வரை பதவி உயர்வு பெறுபவர்களுக்கு தான் அடிமட்ட காவல் நிலையத்தின் அத்தனை செயல்பாடுகளும் தெரியும். ஆனால் அவர்களுக்கு SP பதவி கொடுப்பதில்லை. ஆகவே காவல் நிலைய செயல்பாட்டில் குறைகள் ஏற்படுகிறது. அதனை தடுக்க வேண்டும் எனில் தமிழக அரசு நேரடியாக உதவி ஆய்வாளர் (தாலுகா) பணிக்கு சேர்ந்து ADSP உள்ள அதிகாரிகளை தேர்வு செய்து அவர்களுக்கு SP பதவி கொடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் SP ஆக அமர வைத்து பாருங்கள் நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் வராது அதே போல இதுபோன்ற மரணங்களும் வராது, காரணம் அவர்களுக்கு மட்டுமே காவல் நிலையத்தை முறையாக கட்டுப்படுத்தும் அத்தனை பணி நுணுக்களும் தெரியும்.

* “நேர்மைக்கு கிடைத்த பரிசு 🎁 சிறை. ஆகவே இந்த தீர்ப்பில் எனக்கு உடன்பாடில்லை”

– Dr. மு. சாதிக் (வழக்கறிஞர்)

கட்டுரையை எழுதியவர்

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *