பாகம்-4
“காலனி ஆதிக்கக் கர்வம் மற்றும் விடுதலை வேட்கை வீரம்” என்ற வகையிலேயே டிரம்ப் – செலன்ஸ்கி உரையாடல்கள் நிகழ்ந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
டிரம்ப் – செலன்ஸ்கி உரையாடல்கள் குறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உக்ரைன் போரில் சிக்கிக்கொண்ட இரசியப் பொருளாதாரம் புதை சேற்றில் மாட்டிக் கொண்டது போல் கீழே மூழ்கிக் கொண்டே போகிறது.
இந்தியா போன்ற வெளிநாடுகளிலிருந்து இரசியாவுக்கு வேலை தேடி வந்தவர்களை ஏமாற்றி, அவர்களுக்கு இராணுவத்தில் குறைந்தபட்ச பயிற்சி கொடுத்து உக்ரைன் போருக்கு அனுப்பி பலியிட்டது. தன்நாட்டிலேயே தனியார் கூலிப்படையை வாடகைக்கு அமர்த்தி உக்ரைன் போருக்கு அனுப்பினார் புத்தின். அதில், தகராறு வந்து கூலிப்படை முதலாளி (தலைமைத் தளபதி) இரசியப் பகுதிகளைப் பிடித்து ஆள்கிறேன்; வரி விதிக்கிறேன் என்று கிளம்பி செயல்படுத்தினார். பின்னர், அவருடன் அமைதி உடன் படிக்கை போட்டார் இரசியாவின் முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரியும், இந்நாளின் சர்வாதிகாரியுமான புத்தின்!
இப்போது புத்தினும், டிரம்பும் ராசி ஆகி, டிரம்ப், செலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்குக் கூப்பிட்டு அவமானப்படுத்தினார். “போர் நிறுத்தம் செய்தே ஆக வேண்டும்; புத்தின் பிடித்த பகுதி அவர் வசம் இருக்கட்டும்” என்றார். மறுத்தார் செலன்ஸ்கி. இதோ அவர்களின் உரையாடலின் ஒரு சிறு பகுதி:
வட அமெரிக்கத் துணை குடியரசுத் தலைவர் ஜே.டி.வான்ஸ்:
“அமெரிக்காவின் சிறப்பே அதன் இராசதந்திரம் தான்! பைடனை விடச் சிறப்பாக இராசதந்திரத்தைப் பயன்படுத்துபவர் டிரம்ப். எனவே, போர் நிறுத்தம் செய்யுங்கள்”
செலன்ஸ்கி:
“2014-ல் இருந்து புத்தின் ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். அவரை ஒபாமா, டிரம்ப், பைடன் ஆட்சிகள் தடுக்கவில்லை. இப்போது, மீண்டும் வந்துள்ளீர்கள். நீங்கள் (ட்ரம்ப்) புத்தின் போரைத் தடுப்பீர்கள் என்று நம்புகிறேன். எங்கள் மக்கள் தொடர்ந்து செத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் பல முறை புத்தினுடன் பேச்சு நடத்தினோம். போர் நிறுத்தக் கையொப்பமிட்டோம்; பலன் இல்லை”
வான்ஸ்:
“தலைவர் டிரம்ப் உங்களை மரியாதையாக வெள்ளை மாளிகைக்கு அழைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார். நீங்கள், அவரை அவமரியாதை செய்கிறீர்கள்”
இந்த கட்டுரையின் தொடர்ச்சியை படிக்க அடுத்த கட்டுரையை வாசிக்கவும்..