பாகம்-5
டிரம்ப் – செலன்ஸ்கி உரையாடல்கள் குறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“டிரம்ப்:
“உங்கள் மக்களைப் போரில் ஈடுபடுத்துவது பிரச்சினை இல்லையா?”
செலன்ஸ்கி:
“எங்களுக்குப் பிரச்சினை இருக்கிறது”
வான்ஸ்:
“வெள்ளை மாளிகைக்கு மரியாதையுடன் வந்த நீங்கள் எங்களது நிர்வாகத்தைத் தாக்குகிறீர்கள்”
செலன்ஸ்கி:
“போரில் எல்லாருக்கும் பிரச்சினைகள் இருக்கும். அதை நீங்கள் உணரவில்லை. எதிர்காலத்தில் உணர்வீர்கள்”
டிரம்ப்:
“நாங்கள் என்ன உணரப் போகிறோம்? நாங்கள் ஒரு பிரச்சினையைத் தீர்க்க முயல்கிறோம். ஆனால், நீங்கள் எங்களை அவமதிப்பதுபோல் பேசுகிறீர்கள்”
செலன்ஸ்கி:
“அப்படி எதுவும் நான் பேசவில்லை”
டிரம்ப்:
“எனக்கு ஆணை பிறப்பிக்கும் நிலையில் நீங்கள் இல்லை”
வான்ஸ்:
“எங்களுக்கு ஆணை பிறப்பிக்கும் வேலையை நீங்கள் செய்கிறீர்கள்”
டிரம்ப்:
“இப்போது நீங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறீர்கள். நாங்கள் என்ன உணரப் போகிறோம் என்பதை எங்களுக்கு உணர்த்தும் நிலையில் நீங்கள் இல்லை”
செலன்ஸ்கி:
“ஆமாம், போரின் தொடக்கத்தில் இருந்தே..”
டிரம்ப்:
“உங்களிடம் துருப்புச் சீட்டு இல்லை. எங்களுடன் இணைந்தால், துருப்புச் சீட்டு கிடைக்கும்”
செலன்ஸ்கி:
“நான் சீட்டு விளையாடுவதில்லை. நான் ஒரு நாட்டின் குடியரசுத் தலைவர். நாட்டைப் பற்றிக் கலலையுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்”
டிரம்ப்:
“நீங்கள் இப்போது சீட்டாட்டம் தான் ஆடுகிறீர்கள். பல இலட்சம் மக்களின் உயிர்களுடன் சூதாடுகிறீர்கள்”
செலன்ஸ்கி:
“நீங்கள் என்ன செய்கிறீர்கள்?”
டிரம்ப்:
“நீங்கள் மூன்றாம் உலகப்போருடன் சூதாடுகிறீர்கள். அமெரிக்கா, உங்களுக்கு அளவுக்கு அதிகமாக ஆதரவளித்தது”
செலன்ஸ்கி:
“உங்களுக்கு நன்றி சொல்கிறேன். ஆனால், போரைப் பற்றி நீங்கள் மிகவும் சத்தமாகப் பேசினால், நீங்கள் நினைத்ததைச் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா?”
டிரம்ப்:
“நீங்கள் நிறையப் பேசிவிட்டீர்கள். உங்கள் நாடு பெரிய சிக்கலில் உள்ளது”
செலன்ஸ்கி:
“எனக்குத் தெரியும்”
டிரம்ப்:
“நீங்கள் வெற்றி பெறவில்லை; இனி வெற்றி பெறப் போவதுமில்லை. எங்களது படைக்கருவிகள் உங்களிடம் இல்லாமல் போயிருந்தால், இந்தப் போர் இரண்டு வாரங்களில் முடிந்திருக்கும்”
செலன்ஸ்கி:
“மூன்று நாட்களில் முடிந்திருக்கும் என்று புத்தின் சொல்கிறார். அவருடைய கருத்தை நீங்கள் எதிரொலிக்கிறீர்கள்”
வான்ஸ்:
“நீங்கள் தவறு செய்கிறீர்கள்”
டிரம்ப்:
“ஓர் ஒப்பந்தத்தை விட, வேகமாகப் போர் நிறுத்தம் கொண்டு வரமுடியும்”
செல்ன்ஸ்கி:
“போர் நிறுத்தம் பற்றி எங்கள் மக்களிடம் கேளுங்கள்”
டிரம்ப்:
எனக்குப் பிடிக்கவில்லை. இது போல முட்டாள் குடியரசுத் தலைவர் (Stupid President) பைடன் தான் செய்வார்”
அப்போது ஒரு செய்தியாளர் குறுக்கிட்டு: “இரசியா போர் நிறுத்தத்தை மீறினால் என்ன செய்வது?”
டிரம்ப்:
“எதுவும் நடக்கலாம். இப்போதே உங்கள் தலையில் குண்டு விழுந்தால் என்ன செய்வது? பைடனை இரசியா மதிக்கவில்லை. ஆனால், புத்தின் என்னை மதிக்கிறார். அவர் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார். ஆனால், (நான் இல்லாமல்) நீங்கள் ஒரு ஒப்பந்தத்தைச் செய்ய முடியுமா? நீங்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும் அல்லது நாங்கள் வெளியேறிவிடுவோம்”
இப்படியாக உரையாடல் போர் நடந்தவுடன், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வெளியேறி விட்டார். வெள்ளை மாளிகைக்கு வந்திருந்த உக்ரைன் அதிகாரிகள், ஊடகத்தார் அனைவரும் வெளியேற வேண்டும் என்று, அமெரிக்க அதிகாரிகள் கூறி வெளியேற்றனர்.
இந்த கட்டுரையின் தொடர்ச்சியை படிக்க அடுத்த கட்டுரையை வாசிக்கவும்..