“LKG – UKG பசங்க போல சண்டை போடுறாங்க” என்று, BJP – DMK-வின் கட்சியின் பெயரை சொல்லாமல் விஜய் சாடியது, பெரும் வைரலாக மாறி வருகிறது.
தவெக 2ம் ஆண்டுவிழா, மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெற்று வருகிறது. இதில், அக்கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
தவெக 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கு தவெக தலைவர் விஜய், பெரியார் சிலையை பரிசளித்தார்.
விழாவில் தவெக தலைவர் விஜய், “தவெக எளிய மக்களுக்கான கட்சி. பண்ணையார் கட்சி இல்லை” என்று, அதிரடியாக தனது பேச்சை தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய விஜய், “பூத் கமிட்டி மாநாடு விரைவில் நடைபெற உள்ளது. அன்று தெரியும் தவெக, எந்த கட்சிக்குமு் சளைத்தது இல்லை என்று” என்றும், அவர் சூளுரைத்தார்.
அத்துடன், “அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, எதிரிகளும் கிடையாது” என்றும், “எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்; அது தனிப்பட்ட உரிமை” என்றும், விஜய் முழங்கினார்.
மேலும், “கூட்டாட்சித் தத்துவத்தை மீறி மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையை கேள்விக்குறியாக்கி வலுக்கட்டாயமாக தணித்தால் எப்படி ப்ரோ?” என்றும், மத்திய அரசு தலைமையிலான பாஜக அரசை நக்கலடித்தார்.
“மொழியை கற்பது தனிப்பட்ட உரிமை; வலுக்கட்டாயமாக திணித்தால் எப்படி ப்ரோ?” என்றும், மீண்டும் மீண்டும் பாஜக அரசை, விஜய் நக்கலடித்தார்.
முக்கியமாக, “இங்கு என்ன பிரச்சனை நடந்துகிட்டு இருக்கு? ஆனால், நீங்கள் என்னாடானா, ஹேஷ்டேக் போட்டு விளையாடிட்டு இருக்காங்க. LKG – UKG பசங்க போல சண்டை போடுறாங்க” என்று, BJP – DMK-வின் கட்சியின் பெயரை சொல்லாமல் விஜய் சாடினார்.
குறிப்பாக, “1967, 1977 சட்டமன்ற தேர்தல்களை போல புரட்சி நடக்கும் என்றும், ஒரு முக்கிய சக்தியாக நாம் மாறி வருகிறோம்” என்றும், தவெக தலைவர் விஜய் அதிரடியாக பேசினார்.