Mon. Jun 30th, 2025

பெற்றோர் விவாகரத்து பெற உள்ளதாக கூறியதால் 2 மகள்கள் மெரீனா கடலில் குதித்து தற்கொலைக்கு முயற்ச்சி..

பெற்றோர் விவாகரத்து பெறப்போவதாக கூறியதால், அவர்களது 2 மகள்கள் மெரீனா கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை மெரீனா கடலில் நேற்று இரவு நேரத்தில் 2 இளம் பெண்கள் இறங்கி தற்கொலைக்கு முயன்றனர். அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த தலைமைக் காவலர் குமரேசன், காவலர் சங்கர் குமார், முருகன் ஆகியோர் ஓடிச் சென்று 2 இளம் பெண்களை கடலில் இறங்கி காப்பாற்றினர். இதையடுத்து, மெரீனா காவல் நிலைய்த்திற்கு கொண்டு சென்று அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், 2 பேரும் சகோதரிகள் என்பதும், ஒருவர் தனியார் நிறுவனத்திலும், மற்றொருவர் கல்லூரி மாணவி என்பதும் தெரிய வந்தது.

அத்துடன், அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தேனாம்பேட்டை பகுதியில் பெற்றோருடன் வசித்து வருவதும், இவர்களது தாய்- தந்தைக்கு அடிக்கடி சண்டை நிகழ்ந்து வந்ததால், மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததும் தெரிய வந்தது.

இந்த பிரச்னை காரணமாக, இந்த பெண்களின் பெற்றோர் விவாகரத்து பெறப் போவதாக 2 மகள்களிடம் தெரிவித்ததாக தெரிகிறது. இதனால், மிகுந்த மன வேதனை அடைந்த 2 மகள்களும் மெரீனா கடலில் மூழ்கி தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.

இதனையடுத்து, போலீசார் அவர்களது பெற்றொருக்கு தகவல் தெரிவித்து காவல் நிலைய்த்திற்கு வர வழைத்து கவுன்சிலிங் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், 2 மகள்களும் பெற்றோருடன் செல்ல மாட்டேன் என்று கூறி விட்டு, உறவினர் மணிவண்ணன் என்பவருடன் செல்வதாக போலீசிடம் எழுதிக் கொடுத்து விட்டு சென்று விட்டனர். இச்சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், சென்னையில் மற்றொரு நிகழ்வாக பேரக்குழந்தை மீது பந்து விழுந்ததை கிரிக்கெட் பேட்டால் தட்டி கேட்ட முதியவரை சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சூளைமேடு ஸ்ரீராமபுரம் முதல் தெரு பகுதியில் வசித்து வருபவர் 72 வயதான வீரப்பன்.. இவருக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சூளைமேட்டில் தன்னுடைய இளைய மகன் அரவிந்த் மற்றும் லட்சுமி உடன் வசித்து வருகிறார்.

இந்த சூழலில் தான், நேற்று முன்தினம் முதியவர் வீரப்பன் தன்னுடைய பேரக்குழந்தையுடன் வீட்டின் வாயிலில் வெளியே விளையாடிக் கொண்டிருந்த பொழுது அதே வீட்டில் குடியிருக்கும் தனலட்சுமி மற்றும் சந்தியா ஆகியோரின் குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்,, அப்பொழுது அவர்கள் விளையாடி கொண்டிருந்த கிரிக்கெட் பந்தானது முதியவர் வீரப்பனின் பேர குழந்தை மீது விழுந்து உள்ளது. இதனை தட்டிக்கேட்டபோது, அவர்களுகு்குள் கை களப்பு ஏற்பட்டு, முதியவர் தாக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறி போலீஸ் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *