“உலகமே வியந்து சாதனை படைத்த சிம்பொனி இசை அமைத்த இளையராஜா மும்மொழி கல்வி படித்தவரா?, ராமேஸ்வரத்தில் பிறந்து விஞ்ஞானியாகவும் ஜனாதிபதியாகவும் இருந்த அப்துல் கலாம் மும்மொழி கல்வி படித்தாரா?” என்று, அனல் தெறிக்க பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொண்டசமுத்திரம் பகுதியில் வேலூர் மாவட்ட இளைஞரணி சார்பாக இந்தி எதிர்ப்பு கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமைக் கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.
“நாம் இந்தி படிக்க வேண்டிய அவசியம் இல்லை அது ஒரு மொழியும் அல்ல வவ்வால் போன்று தொங்கிக் கொண்டுள்ள மொழி அதில் படித்து நமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்றும். அகிலத்தை அளக்கும் ஆங்கிலத்தையே பேச மூன்று வார்த்தைகள் தெரிந்தால் போதும் உலகம் முழுவதும் சென்று வரலாம் இங்கு இந்தி படி என்கிறார்கள் இந்தி படித்தால் என்ன வரும் என்று கேட்டால்? அதற்கு பதில் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.
இந்தி படித்ததனால் தமிழர்கள் முன்னேற்றமா அடைந்தார்கள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? இன்று இசைஞானி இளையராஜா மதுரை மாவட்டத்தில் பிறந்து தமிழ்நாட்டில் இந்தி பாட்டு கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அதை அதை மாற்றி எங்கும் ஒலிக்கும் தமிழ் பாட்டல்களாக மாற்றியவர் இளையராஜா.
இன்று இங்கிலாந்தில் சென்று ஒரே நேரத்தில் 180 இசைக் கருவிகளைக் கொண்டு சிம்பொனி இசை அமைத்தார் சாதனை படைத்தார் இளையராஜா. என்ன மும்மொழி திட்டத்தில் படித்தவரா?
ராமேஸ்வரத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து அரசு பள்ளியில் படித்து விஞ்ஞானியாகவும் ஜனாதிபதியாகவும் உயர்ந்த அப்துல் கலாம் மும்மொழி படித்தவரா? என்று, அனல் தெறிக்க திமுக தலைமைக் கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசினார். அவர் பேச்சு பொதுமக்கள் இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.