Mon. Jun 30th, 2025

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை பற்றி நடிகை கௌதமி என்ன சொன்னார்?

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து, நடிகை கௌதமி பேசியது தமிழக அரசியல் களத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், “ரசிகர்கள் வேறு.. வாக்காளர்கள் வேறு என புரிந்துகொண்டேன்..” என்று, மநீம கட்சியினரின் தலைவர் கமல்ஹாசன் பேசியது பெருமு் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. இதனால், மக்கம் நீதி மய்யம் மற்றும் தவெக-வினர் இணையத்தில் வார்த்தை யுத்தம் நடத்தி வந்தனர். அதன் தொடர்ச்சியாக, தறபோது நடிகை கௌதமியும் விஜயின் அரசியல் பற்றி பேசி உள்ளார்.

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருக்கும் நடிகை கௌதமி, செய்தியாளர்களிடம் பேசும்போது, “விறுவிறுப்பாக எனது பணிகள் அதிமுகவில் சென்று கொண்டிருக்கிறது. போகப் போக எனது பணிகளை பார்ப்பீர்கள்” என்று, பதில் அளித்தார்.

அத்துடன், “வரும் சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்றும், எடப்பாடி பழனிச்சாமி எந்தவித குழப்பத்திலும் இல்லாமல் தெளிவாக உள்ளார்” என்றும், அவர் கூறினார்

திமுக அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்கின்றது. பாலியல் குற்றச்சாட்டுகள், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பின்மை, போதைப் பொருள் கலாச்சாரம் என பட்டியல் நீள்கிறது” என்றும், திமுக அரசு மீது குற்றம்சாட்டுக்களை சுமத்தினார்.

“திமுக ஆட்சியில் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது என்றும், மக்கள் சுத்தமாக வாழ முடியவில்லை” என்றும், குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுகவை உட்கட்சி பிரச்சனைகள் ஒன்றும் அசைத்து விட முடியாது” என்றும், பேசினார்.

அப்போது, நடிகர் விஜய் குறித்தான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய அவர், “அரசியல் வேறு சினிமா வேறு” என்றார்.

தொடர்ந்து பேசிய நடிகை கௌதமி, “சினிமாவில் ஜெயித்தவர்கள் அரசியலில் ஜெயிக்க முடியாது. சினிமாவில் ஜெயிப்பதற்கு வேறு திறமைகளும், அரசியலில் தலைவராக உருவாவதற்கு வேறு திறமைகளும் தேவை” என்று, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து நடிகை கௌதமி பதில் அளித்து உள்ளார்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *