தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து விசிக தலைவர் திருமாவளவன் பேசி உள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தகைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், “இந்தாண்டு மார்ச் 8-ல், மீண்டும் ஒரு மாநாடு நடத்த காலமும் இல்லை நிதிஆதாரமும் இல்லை, இந்தாண்டுக்கான உலக மகளிர் தினத்தை ஓட்டி, திருவண்ணாமலையில் மார்ச் 29 ஆம் தேதி மகளிர் விடுதலை இயக்கம் விழா நடைபெற உள்ளது” என்று, குறிப்பிட்டார்.
தொட்ர்ந்து பேசிய திருமாவளவன், “மாநாடு இல்லை. ஆனால், அணியில் உள்ள பெண்கள் பங்கேற்க வேண்டும்” என்று, வலியுறுத்தினார்.
அத்துடன், “தேர்தல் அங்கீராகத்தை எப்போதே பெற்று இருக்க வேண்டும். கால் நுாற்றாண்டு ஆகி தான் தமக்கு கிடைத்து உள்ளது. அதற்கு நம் பட்டபாடு நமக்கு தான் தெரியும். விசிக ஒரு அரசியல் இயக்கமாக 25 ஆண்டுகள் ஆனாலும், அத்றகு முன்னதாகேவே பத்து ஆணனடுகள் மக்கள் இடத்தில் பணியாற்றிய இயக்கம் விசிக எனவும், திருமா பேசினார்.
“1990 ல் தொடக்கதில் இநத்த இயக்கத்திற்கான கொடி வடிவமைப்பில் நடுவில் பாயும் சிறுத்தை படம் மேலே நீல வண்ணம் கீழே சிவப்பு நடுவில் நட்சத்திரம் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது” என்றும், அவர் குறிப்பிட்டார்.
“ஏப்ரல் 16 ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளில் மதுரையில் கொடியை ஏற்றி வைத்தேன். இந்த இயக்க கொடி நாளை நமது தேசிய கொடி என கொடியை ஏற்றினோம். கொடியில் இருந்த நட்சத்திர கோட்பாடு சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம்
மகளிர் விடுதலை, பாட்டாளி மக்கள் விடுதலை, ஏகாந்திய ஏதிர்ப்பு உள்ளிட்ட முழுக்கங்களை மையப்படுத்தி பாயும் சிறுத்தை நடுவில் இருந்தது. மகளிர் விடுதலை பெற வேண்டும் என்றால், எதில் இருந்து எவரிடம் இருத்து விடுதலை பெற வேண்டும் என்ற கேள்வி வரும்” என்றும், கூறினார்.
மேலும், “ஆண்களிடம் இருந்து தான் என பதில் வரும். ஆனால், ஒரு சில பெண்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆண்களால், பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆணாதிக்கம் என்ற கருத்தியல் விடுதலை சமூக அடையாளமாக, உலக அடையாளமாக உள்ளது. இதனை புரிந்து கொள்ளும் போது தான், அதில் இருந்து வலிமைபெற முடியும்” என்றும், திருமா பேசினார்.
“மகளிர் விடுதலை என்பது பாலீனம், சமத்துவம் பார்வையை குறிக்கும், பெண்களுக்கும், ஆண்களுக்கும் உரிமை, அதிகாரம், வாய்ப்புகள் என இந்திய அரசியலமைப்பில் உள்ளது. சமத்துவம் என்றால் என்ன status and opportunities என்பது தான். ஒருவரை எப்படி மதிக்கிறோம் எப்படி நடத்துகிறோம் என்பது தான். எல்லோருக்கும் சமமான உணவு வழங்கி விட முடியாது சமமான வீடு கட்டி தந்து விட முடியாது. பதவியை வழங்க முடியாது. உடையை வழங்க முடியாது. எல்லோரையும் வாழ வைக்க முடியாது. எல்லோருக்கும் சமமான ஒரே கல்வியை வழங்க முடியாது. ஆனால், எல்லோயைும் சமமாக நடத்த முடியும்” என்றும், அவர் தெரிவித்தார்.
“ஒரு கட்சிக்கு வாக்கு வங்கி எவ்வளவு முக்கியமானது. அதன் அடிப்படையில் தான் ஒரு கூட்டணி தீர்மானிக்கப்படும். ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் 40 ஆயிரம் வாக்குகள் பெற்றாலே அது பெரிய கட்சி என போற்றுகிறார்கள். 50 ஆயிரம் வாக்குகள் பெற்றாலே பெரிய அளவுக்கு சக்தி இருப்பதாக சொல்லுகிறார்கள்.
இது நான் இருந்த இடத்தில் யாராவது ஒரு நடிகர், இந்த 2 லட்சம் வாக்குகள் பெற்றிருந்தால் இவர் தான் அடுத்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் என ஊடகங்கள் எழுதியிருப்பார்கள்.
நம்மை அப்போது யாரும் கண்டு கொள்ளவே இல்லை. அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அதை ஒரு விவாதமாகவில்லை. அதை ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. அதை கட்டுரையாக எழுதவில்லை. அதற்கு ஒரு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. 15 நாட்களில் எப்படி திருமாவளவனுக்கு ரெண்டே கால் லட்சம் வாக்குகள் கிடைத்தன? இந்த அளவுக்கு வாக்குகள் எப்படி உருவாகியது? அவர் மீது நம்பிக்கை வைத்து குவிந்தன. இவர் மீது உள்ள எதிர்பார்ப்பு என்ன? இவரின் எதிர்கால அரசியல் எப்படி இருக்கும்? என்றெல்லாம் யாரும் பேசவில்லை. எங்கோ எட்டாவது பக்கத்திலே 16 வது பக்கத்திலே செய்தியாக போட்டார்கள். வன்முறை நடந்தது என்று முதல் பக்கத்தில் போட்டு விடுதலை சிறுத்தைகள் வன்முறையாளர்கள் என்ற ஒரு தோற்றத்தை உருவாக்கினார்களே தவிர, நமக்கு பாசிட்டிவ் ஆக எந்த ஒரு செய்தியும் அன்றைய ஊடகங்கள் போடவில்லைஃ நம்மை இருட்டடிப்பு செய்தார்கள்.
இன்றைக்கு கட்சி ஆரம்பித்தாலே, ஆஹா ஓஹோ என்று யூகங்களை எல்லாம் பெரிய பெரிய செய்திகளாக மாற்றுகிறார்கள்ஃ இப்போது 20% 24% என்றெல்லாம் சொல்கிறார்கள். அடுத்த முதலமைச்சர் இவர் தான் என்று ஊடகங்களே வரிந்து கட்டிக்கொண்டு வலிந்து வலிந்து செய்தியை ஊதி பூதாகாரம் படுத்துகிறார்கள். இன்னும் ஒரு தேர்தலில் கூட நிற்கவில்லை. வாக்குகள் எவ்வளவோ என்று யாருக்கும் தெரியாது. ஆனாலும், இந்த சமூகமும் ஊடகமும் இத்தகைய அணுகு முறையை கொண்டிருக்கிறது என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எப்படிப்பட்ட சமூகத்தில் தான் போராடி போராடி இன்றைக்கு இந்த அங்கீகாரத்தை பெற்று இருக்கிறோம்.
மற்றவர்கள் எல்லாம் 100 மீட்டர் ஓடி பரிசு வாங்கி விடுவான். நாம் பத்தாயிரம் மீட்டர் ஓடினால் தான், அந்த பரிசை வாங்க முடியும். ஒரு கட்சியாக இருக்காமல் அதை புறந்தள்ளும் சமூகத்தில் நாம் இருக்கிறோம். நமக்கு பின்னால் எத்தனை கட்சி தோன்றினாலும், அந்த கட்சியை முன்னால் எழுதி அதற்கு பின்னால் நம் கட்சியை எழுதும் ஆதிக்கம் நிறைந்த சமூகத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம்.
எத்தனை பேர் அறிக்கையை எழுதினாலும், நம் அறிக்கையை கடைசியாக போடுவது நிலையை விதியாக கொண்டிருக்கிற சமூக கட்டமைப்பில் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.
இந்த சீனியாரிட்டியும், அவர்களிடம் இல்லை சமூக மதிப்பீடுகள் அவ்வாறு இருக்கின்றன. இந்த சமூகத்தில் நாம் நடத்தி இருக்கின்ற கால் நூற்றாண்டு போராட்டம் என்பது எல்லோரும் எட்டு மணி நேரம் தூங்குகிறார்கள் என்றால், நாம் மூன்று மணி நேரம் தான் தூங்குகிறோம். எல்லோரும் ஒரு மணி நேரம் பார்வையாளர்களை சந்திக்கிறோம் என்றால், 20 மணி நேரம் பார்வையாளர்களை சந்திக்கின்றோம். ஒரு மாதத்திற்கு சில ஆயிரம் கிலோ மீட்டர் பயணிப்பார்கள் என்றால், நாம் பத்தாயிரம் கிலோ மீட்டர் பயணிப்போம். பல நெருக்கடிகளை சந்தித்து கல்விச்சு சந்திச்சு ரத்தம் சிந்தி அவமானங்களை சுமந்து அனைத்தையும் தாங்கிக் கொண்டு அன்புடன் அங்குலமாக நாம் இந்த இடத்தை தொட்டு இருக்கிறோம். இந்த தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொண்டாடப்படுவது தான். ஆனாலும், நான் அதை கொண்டாட விரும்புவதில்லை. அதனால் தான், மகளிர் அணிகள் கொண்டாட வேண்டும் என்று சொல்லிவிட்டேன்” என்று, திருமாவளவன் பேசினார்.