Mon. Jun 30th, 2025

LGBTQIA PLUS சமூகத்தினருக்கு கொள்கை என்ன? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..

“LGBTQIA PLUS சமூகத்தினருக்கு வரைவு கொள்கையை பிப்ரவரி 17 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. 

எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ் (LGBTQIA PLUS) சமுதாயத்தினர் தற்போது வெளிப்படையாகவே, தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், அவர்களது உரிமை சார்ந்தும் தற்போது பொது வெளியில் அவர்கள் பேசவும் தொடங்கி உள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே, சில மாதங்களுக்கு முன்பு கூட சென்னையில் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இது தமிழகத்தில் பேசும் பொருளாகவும் மாறியது.

இந்த நிலையில் தான், எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ் (LGBTQIA PLUS) சமூகத்தினரின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில், தமிழக அரசுத்தரப்பில், “எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ் (LGBTQIA PLUS) சமூகத்தினருக்கான கொள்கை இறுதி வடிவம் பெறும் நிலையில் இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட பிற துறைகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டு இருப்பதாகவும்” தெரிவிக்கப்பட்டது.

மேலும், “பிற துறைகளின் கருத்துக்களின் அடிப்படையில் முறையான கொள்கைகள் வகுத்து, தமிழக அமைச்சரவையின் ஒப்புதலை பெற்று அறிவிக்கப்படும் என்றும், தமிழக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

முக்கியமாக, “சமூகத்தில் தொடர்ச்சியாக பாரபட்சமாக நடத்தப்படும், பாலினம் மருவிய பாலினத்தவருக்கான தனிக் கொள்கையை வகுப்பது என்று, அரசு முடிவு செய்து உள்ளதாகவும், அதற்கான தனி வரைவு கொள்கையும் வகுக்கப்பட்டு உள்ளதாகவும்” தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதைக் கேட்ட நீதிபதி, “மருவிய பாலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ் (LGBTQIA PLUS) மற்றும் மருவிய பாலினத்தவர்களுக்கான ஒரே கொள்கையை வகுப்பதே முறையாக இருக்கும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

“எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ் (LGBTQIA PLUS) சமூகத்தினருக்கான வரைவு கொள்கையையும், மருவிய பாலினத்தவர்களுக்கான வரைவு கொள்கையையும் சமர்ப்பிக்க வேண்டும்” என்று, தமிழக அரசுக்கு நீதிபதி அரடியாக உத்தரவிட்டார்.

குறிப்பாக, “இந்த இரு பிரிவினருக்கும் ஒரே கொள்கையை வகுப்பதில் என்ன சிக்கல் உள்ளது என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 17 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டு உள்ளார். இதனால், “எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ் (LGBTQIA PLUS) சமூகத்தினர் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து உள்ளனர்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *